கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் தற்போது கரும்பு அரவை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. நேற்று வழக்கம்போல சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் சாலையோரம் இருந்த ஒருவரின் தகர கொட்டகை சேதமானது. இதுகுறித்து அறிந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.