பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து விலையுயர்ந்த ஓவியம் ஒன்று சினிமா பாணியில் திருடப்பட்டது. தென்கிழக்கு பிரான்சிலிருக்கும் நான்சி நகரிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றில் அந்த ஓவியத்தின் சட்டம் (frame) மட்டும் சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அதிலிருந்த ஓவியத்தைக் காணவில்லை. இதனையடுத்து அருங்காட்சியகத்தின் காவலாளிகள் ஓவியம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அந்த ஓவியத்தின் மதிப்பு 1.5 மில்லியன் யூரோக்கள். இச்சம்பவம் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் நடந்து ஓராண்டுக்குப் பின், உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் கொலைக் குற்றத்தில் தொடர்புடைய ஒருவரின் வீட்டை போலிசார் சோதனை செய்துள்ளனர். அப்போது போலிசாரிடம் அந்த நபர், வீட்டின் அலமாரியில் விலையுயர்ந்த ஒரு ஓவியம் இருப்பதாகவும், அதை கவனமாக கையாளுமாறும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அது பிரான்சில் திருடப்பட்ட ஓவியம் என்பது தெரியவந்துள்ளது. இதன்பின் அந்த நபரை விசாரித்ததில் அந்த ஓவியத்தைத் திருடியவர் வாடிம் (Vadym Huzhva, 64) என்று கூறியுள்ளார். மேலும் தற்போது, வாடிம் மீதான விசாரணை பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்றில் தொடங்கப்பட்டுள்ளது.