பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிரி(20) என்ற மகன் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி புதூர் பகுதியில் தங்கியிருந்து எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிரி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து காணும் பொங்கல் முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காக அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் கிரி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிலர் கிரியை தாக்கி அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த கிரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் களரம்பட்டி கிராமத்தை சேர்ந்த நவீன், கதிரேசன், அருண், அரவிந்த் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.