நீலகிரி மாவட்டம் உள்ள குன்னூர் அருகே நான்சச் குடியிருப்பு பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் வன பகுதியிலிருந்து வெளியேறிய கரடி தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்புக்குள் நுழைந்து அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்கு வந்தது. இதனையடுத்து கரடி வகுப்பறை கதவுகளை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தியது.

இதனை தொடர்ந்து சமையல் கூட்டத்திற்குள் நுழைந்த கரடி உணவு பொருட்கள், சமையல் பாத்திரங்களை சூறையாடி விட்டு அங்கிருந்து சென்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே அட்டகாசம் செய்யும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.