நாமக்கல் மாவட்டத்திலுள்ள பாண்டமங்கலம் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தேவிபிரியா(32) தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கடந்த நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட தேவிபிரியா மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மாத்திரை சாப்பிடாமல் இருந்த தேவி பிரியாவை ஸ்ரீதர் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் பிறந்த தேவி பிரியா தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேவி பிரியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.