மதுரை மாவட்டத்திலுள்ள சாத்தங்குடியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது கார்த்திகேயன் மதுரை விமான நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கார்த்திகேயன் 9-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர்.