நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோழசிராமணி பச்சாகவுண்டன் வலசு பகுதியில் லாரி டிரைவரான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரகாஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் லாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரகாஷ் மோட்டார் சைக்கிளில் நண்பர்களை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் நண்பர்களை பார்த்துவிட்டு கந்தம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரகாஷை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பிரகாஷ் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.