திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலையில் தாளக்கடை, அகஸ்தியர் புரம், தென்மலை உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் மூலிகைச் செடிகளும், விலை உயர்ந்த அரிய மரங்களும் காணப்படுகிறது. இந்நிலையில் அகஸ்தியர் புரத்திலிருந்து தென்மலை செல்லும் மலைப்பாதை ஓரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

மேலும் தீ கொழுந்து விட்டு எரிந்து வேகமாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் தீயை அணைத்தனர். மேலும் மர்ம நபர்கள் யாரேனும் காட்டுக்கு தீ வைத்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.