சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கண்ணாடி மில் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புள்ளிமான் சுற்றி திரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அந்த புள்ளிமானை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் வனத்துறை அலுவலர்கள் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மானை மீட்டனர். பின்னர் அந்த புள்ளிமான் கல்லாநத்தம் பகுதியில் இருக்கும் முட்டல் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.