கரூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் சோதனைக்கு சென்றபோது வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்ததாக, கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.