கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை சின்னத்துரை பகுதியில் யூஜின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பினோஸியா என்ற விசைப்படையில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த 11 பேர் கடந்த 14-ஆம் தேதி தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு கரைக்கு வந்து கொண்டிருந்தபோது கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து 35 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் ஜலால் என்பவர் எதிர்பாராதவிதமாக படகில் இருந்து கடலில் விழுந்துவிட்டார். இதனை பார்த்ததும் சக மீனவர்கள் ஜலாலை தேடி பார்த்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து அறிந்த மீனவர்களும் கடலோர பாதுகாப்பு படையினரும் ஜலாலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.