கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செம்பனாபதி பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமணன் ஜமீன் கோட்டம்பட்டி ஆவூர் சின்னம் பாளையத்தில் வைத்து மது அருந்தியுள்ளார். இதனையடுத்து லட்சுமணன் அந்த பகுதியில் இருக்கும் 60 அடி உயர பனை மரத்தின் மீது மது பாட்டிலுடன் ஏறியுள்ளார். பின்னர் மரத்தில் இருந்தபடியே மது குடித்துவிட்டு போதையில் தூங்கிவிட்டார்.

கண்விழித்து எழுந்த லட்சுமணன் மரத்திலிருந்து கீழே இறங்க முடியாமல் தவித்தார். இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிரேன் உதவியுடன் லட்சுமணனை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.