திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் இருக்கும் நகராட்சி குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதுகுறித்து அறிந்த நகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் காற்று மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.