கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கோட்டைமேடு பகுதியில் முகமது ஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவொளி நகரில் பஞ்சு மெத்தை குடோன் அமைந்துள்ளது. அங்கு ஏராளமான பஞ்சு மெத்தைகளை அடுக்கி வைத்துள்ளனர். நேற்று காலை குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பஞ்சு மெத்தைகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்