சென்னை மாவட்டத்தில் உள்ள நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்ற போது 25-க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டி உள்ளனர். அப்போது ஒருவர் குளத்தில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற சென்ற போது அடுத்தடுத்த 5 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 5 பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.