சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி சுக்காம்பட்டி சாலையில் மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர்.

அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பாம்புகள் இடம்பெயர்ந்து வீடுகளுக்குள் புகும் அபாயம் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.