தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.கே நகரில் பட்டாசு குடோன் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் குடோனில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக குடோனில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் குடோன் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இதுகுறித்து அறிந்த போலீசார் குடோனை பார்வையிட்டபோது குடோன் கடந்த சில நாட்களாக செயல்படாமல் இருந்ததும், அங்கு போலீசாரால் கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.