விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதன் சாலை பகுதியில் டேவிட் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு டேவிட் தனது காரை வீட்டு முன்புற வளாகத்தில் நிறுத்தி இருந்தார். நேற்று காலை திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து டேவிட் விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.