சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை தலையாரி பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக பாஸ்கரன் எக்ஸ்பிரஸ் அவென்யூ எதிரில் இருக்கும் பாரதி சாலையில் சோபா, நாற்காலி, பஞ்சு மெத்தை தயாரித்து விற்பனை செய்யும் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை பர்னிச்சர் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.