தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாங்கரை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்து சத்தியா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கேபிள் ஒயரால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சத்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது சகோதரியின் சாவில் மர்மம் இருப்பதாக சத்யாவின் சகோதரர் மாதையன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.