தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். கடந்த மாதம் 29-ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும் 5 1/2 வயது சிறுமியிடம் சிறுவன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் சிறுவனை தட்டி கேட்டார்.

அப்போது சிறுவன் சிறுமியின் தாயை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் தாய் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் 17 வயது சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.