கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை அருகே இருக்கும் மலையில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எறிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகமாக காரணமாக தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் காட்டுத் தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் காற்று வேகமாக வீசுவதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. நேற்று இரண்டாவது நாளாக தீ தொடர்ந்து தெரிந்து கொண்டிருந்ததால் மரங்கள் கருகி நாசமானது. இதனால் குடியிருப்பு பகுதியில் தீ பரவாமல் தடுக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.