விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் தொழிலாளர்கள் உணவு அருந்துவதற்காக சென்றனர். அப்போது தொழிற்சாலை வளாகத்தில் தீப்பெட்டி குச்சிகள் தயார் செய்வதற்கு பயன்படும் பழைய மரக்கட்டைகள், சக்கைகள், ராகுகள் இருந்த அறையில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.