தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊத்துபள்ளம் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சுரேஷ் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதற்கு இரு தரப்பு பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி சமூக நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்திய போது குழந்தை திருமணம் நடத்தப்பட்டு இருப்பது உறுதியானது. இது தொடர்பாக தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் சுரேஷ், அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் என 5 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.