கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிலை விழா பொதுக்கூட்டம்,  நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் கனிமொழி மற்றும் தங்கச்சி தங்கபாண்டியன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் 22 வயசு பெண் காவலர் இருந்த போது கூட்டத்தில் இருந்த இரண்டு திமுக பிரமுகர்கள் பாலியல் அத்துமீறலில் ஏற்பட்ட தகவல் பெரும் பரபரப்பை பேற்படுத்தி இருந்தது.

ஒரு கட்டத்தில் பெண் காவலர்கள் கதறி அழுது இருக்கிறார். இதைக்கண்டு அருகில் இருந்த காவல் ஆய்வாளர் இரண்டு திமுக உறுப்பினர்கள் பிரவீன் மற்றும் ஏகாம்பரம் ஆகிய இரண்டுபேரை பிடித்து  விசாரணை நடத்தினார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டனத்தை தெரிவித்து வந்த நிலையில், இரண்டு பேரும் தெரியாமல் பெண் காவலர் மீது கை பட்டு விட்டதாகவும்,  திமுக நிர்வாகிகள் பெண் காவலரிடம் மன்னிப்பு கூறியதால் புகாரை வாபஸ் பெற்றதாக சொல்லப்படுகின்றது. மன உளைச்சல் காரணமாக பெண் காவலர் தற்போது விடுப்பு சென்று விட்டதாகவும் தகவல் சொல்லப்பட்டுள்ளது.