தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை நேரம் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜனவரி 4-ஆம் தேதி முதல் 6-ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த 48 நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 செயல் டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும் என அதில் கூறப்பட்டுள்ளது.