மதுரையில் பூங்கொடி (31) என்னும் பெண் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டதால் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் கூலி வேலைக்கு செல்லும் பூங்கொடி தனது உறவினரின் வீட்டில் தங்கி வந்தபோது கோவில்பட்டி அருகே விஜயாபுரி பகுதியில் வசித்து வரும் ஜெய் கணேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கிடையயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் கடந்த 2 வருடங்களாக இருவரும் விஜயாபுரி பகுதியில் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த பூங்கொடி வீட்டில் கணவர் இல்லாத போது விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.

வீட்டில் மயங்கி கிடந்த அவரை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.