புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கனரா வங்கி தனது பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் பிப்ரவரி 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து கனரா வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, இனி 9 சேவைகளுக்கு புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கனரா வங்கி 3-ம் தேதி முதல் கடன் அல்லாத, அன்னிய செலவாணி அல்லாத சில சேவைகளுக்கான சேவை கட்டணங்களை திருத்தி உள்ளது.

கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு தற்போது காசோலை ரிட்டன், Ecs டெபிட்  ரிட்டன் கட்டணம், சராசரி குறைந்தபட்ச இருப்பு, சராசரி மாதாந்திர குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காதது, லெட்ஜர் போலியோ கட்டணங்கள் இணையம் மற்றும் மொபைல் வங்கி சேவைகள் போன்ற கட்டணங்களை வங்கி திருத்தி உள்ளது. இருப்பினும் தொழில்நுட்ப காரணங்களால் காசோலை வங்கிக்கு திரும்பினால் கட்டணம் வசூலிக்க படாது.

அதன்படி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காவிட்டால் ஜிஎஸ்டி உடன் 25 ரூபாய் முதல் 45 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் ரூ.1,000-க்கு குறைவான செக் ரிட்டன் ஆனால் ரூ.200, ரூ.1,000, ரூ.10,0000 வரையிலான செக்கிற்க்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.