இந்தியாவில் தற்போது வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அந்த வகையில் டெல்லி, பஞ்சாப், இமாச்சல், உத்தரகாண்ட், பீகார், உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த பகுதிகளில் குறைந்தபட்சம் 2 செல்சியஸ் டிகிரி வரை குளிர் நிலவுகிறது. இந்த கடும் குளிரின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜன.14 ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களிலும் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.