பாஜக கட்சியின் தலைவரும் மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கேசரி நாத் திரிபாதி உடல்நல குறைவினால் காலமானார். இவருடைய சொந்த மாநிலமான உத்திரபிரதேசத்தில் இவருடைய உயிர் இன்று காலை பிரிந்துள்ளது.

இவர் சுவாச பிரச்சனை மற்றும் வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை திடீரென மரணம் அடைந்துள்ளார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியுள்ளார். மேலும் இவருடைய மறைவிற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.