பாலியல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நபர் அரசிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த காந்திலால் என்ற நபர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 2 வருடங்கள் சிறை தண்டனை பெற்றார். ஆனால் காந்திலால் குற்றவாளி இல்லை என்று கூறி தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் குற்றம் செய்யாத தன்னை இரண்டு வருடங்கள் சிறையில் அடைத்த காரணத்திற்காக 10,006 கோடி நஷ்ட ஈடு வேண்டுமென்று அரசிடம் காந்திலால் முறையீடு செய்துள்ளார். மேலும் 2 வருடங்களாக தான் சிறையில் இருந்து பட்ட கஷ்டத்திற்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.