சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேசன் ஜாமீன்  மனுவை 5 முறையாக நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் உதவி ஆய்வாளர் ரகு கணேசன் ஜாமீன் மனுவை ஐந்தாவது முறையாக நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்கில் முக்கியமாக இரண்டு தரப்பு வாதங்கள் அடிப்படையில் இந்த ஜாமீன் மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. விசாரணையில் உள்ள நேரத்தில் ரகு கணேசுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களை கலைக்கவும்,  சாட்சியங்களினுடைய விசாரணைகளில் பாதிப்பு ஏற்படுத்தும் என்ற இரண்டு தரப்பு வாதங்களை வைத்து,  ஜாமீன் மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.