திருச்சி மாவட்டத்தில் உள்ள வையம்பட்டி பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி தனது 14 வயது மகளை கடந்த 2019-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள் சிறுமியின் தந்தையை கண்டித்துள்ளனர். அதற்கு யாரிடமாவது கூறினால் உங்களை கொலை செய்து விடுவேன் என அவர் மிரட்டி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் தொழிலாளியை கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்து திருச்சி நீதிமன்றம் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.