சேலம் அருகே நடைபெற்ற சர்வதேச அளவிலான பூனைகள் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். சேலம் மாவட்டம் வின்சென்ட் பகுதியில் சர்வதேச அளவிலான பூனை கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பூனைகள் பங்கேற்றன.

குறிப்பாக பெங்கால் டைகர், சியாமிஸ், நைஜீரியன் உள்ளிட்ட 20 வகையான பூனைகள் கலந்து கொண்டன. இதில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட முதல் மூன்று பூனைகளுக்கு 10,000 ரூபாய் மதிப்பிலான பூனைக்கான உணவு பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சிறந்த பூனைகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.