கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கே.கே நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தவசெல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை எப்.ஆர்.எஸ் செயலி (முக அடையாளம் மூலம் குற்ற சம்பவங்களில் தொடர்பு உடையவர்களை கண்டுபிடிப்பதற்காக தயாரிக்கப்பட்ட புதிய செயலி) மூலம் புகைப்படம் எடுக்க முயன்ற போது அந்த வாலிபர் போலீசாரை தடுத்தார்.

இதனையடுத்து அவர் தனது தந்தை மற்றும் தம்பியை செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வண்ணாரபாளையம் பகுதியைச் சேர்ந்த முத்தையன், அவரது மகன்கள் முகிலன், முரளி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.