KYC முடிக்கப்படாத FASTAG கணக்குகள் ஜனவரி 31ஆம் தேதியுடன் முழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக NHAI வெளியிட்டுள்ள அறிவிப்பில், FASTAG இல் பணம் இருந்தாலும் கேஒய்சி நிறைவு செய்யப்படாமல் இருந்தால் அந்த கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிய சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது சுங்கச்சாவடி ஊழியர்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.