உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபலமான உருது கவிஞர் முனாவர் ராணா உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளுக்கு முன்பு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் அதற்காக தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.