சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பனையூரில் கனமழை காரணமாக 80 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் வேதனை அடைந்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். எனவே வருவாய் துறை அதிகாரிகளும், வேளாண் துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து நிவாரண தொகையாக 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.