திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர தினம் சிறப்பு பூஜை நடைபெறும். அன்று மாலை இரண்டாம் கால பூஜையின் போது முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.

இதனையடுத்து வட மேற்கு திசையில் இருக்கும் கிருத்திகை மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்துடன் முருகபெருமான் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்த பூஜையில் கலந்து கொண்டால் வாழ்வில் ஆனந்தம் கிடைக்கும் என்பது ஐதீகம்.