பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் நடுத்தெருவில் விவசாயியான கமலக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மது போதையில் இருந்த கமலக்கண்ணு தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கமலக்கண்ணுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கமலக்கண்ணு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.