தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடன இயக்குனராக இருந்தவர் சேத்தன்யா. இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர். பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ள சேத்தன்யா டிவி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டுவிட்டு திடீரென தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். அதாவது சேத்தன்யா நிறைய பேரிடம் அதிகமாக கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த கடனை அவரால் திரும்ப செலுத்த முடியவில்லை.

இதனால் நான் நிறைய பேருக்கு தொல்லை கொடுத்து விட்டேன். அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பண விஷயத்தில் என்னுடைய நற்குணத்தை நான் இழந்து விட்டேன். என்னால் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை. இதுதான் என்னுடைய கடைசி நாள் என்று கூறி ஒரு வீடியோ வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். மேலும் சேத்தன்யாவின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சேத்தன்யா மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.