பிரபலமான பெண் தொழிலதிபர் ரேகா ஜுன்ஜுன்வாலா. இவர் வெறும் 15 நிமிடங்களில் 400 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இன்று அவர் போர்ட் போலியோவில் உள்ள டைட்டன் மற்றும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் மூலம் லாபமடைந்துள்ளார். அதன்படி டைட்டனின் பங்கு விலை இன்று ரூ. 2548.45 இல் இருந்து 2598.70 வரையும், டாடா மோட்டார்ஸின் பங்கு விலை இன்று ரூ. 452 இல் இருந்து ரூ. 470.40 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ரேகா டைட்டனில் 4.58 கோடி பங்குகளையும், டாடா மோட்டார்ஸில் 5.22 கோடி பங்குகளையும் வைத்துள்ளார். மேலும் இன்று டைட்டன் மற்றும் டாடா மோட்டார்ஸின் பங்குகள் உயர்ந்துள்ளதால் தொழிலதிபர் ரேகா 15 நிமிடங்களில் 400 கோடி சம்பாதித்துள்ளார்.