பாலிவுட் சினிமாவில் சஞ்சய் தத் நடித்த முன்னா பாய் எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தின் மூலம் எடிட்டராக தனது திரை உலக பயணத்தை தொடங்கியவர் பிரதீப் சர்க்கார். இந்த படத்திற்கு பிறகு 2005-ம் ஆண்டு பரீணிதா என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் மூலம்தான் நடிகை வித்யா பாலன் முதன்முதலாக திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு ராணி முகர்ஜி நடித்த மர்தானி என்ற படத்தையும் இயக்கினார்.

இப்படி பாலிவுட்டில் பல வெற்றி படங்கள் மற்றும் பல வெப் தொடர்களை இயக்கியுள்ள பிரதீப் சர்க்கார் நேற்று உடல் நல குறைவினால் திடீரென காலமானார். அவருக்கு வயது தற்போது 67. கடந்த 2021-ம் ஆண்டு பிரதீப் சாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து அவர் உடல்நிலை மோசமாக இருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென நேற்று அவர் காலமானார். மேலும் பிரதீப் சர்க்காரின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.