பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ராணாவத். இவர் தமிழில் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகை கங்கனா‌ ரணாவத் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் எமர்ஜென்சி படத்தை அவரே இயக்கி, தயாரித்து, நடிக்கிறார். நடிகை கங்கனா தான் மும்பைக்கு வரும்போது வெறும் 500 ரூபாயோடு வந்ததாகவும், ஒருவேளை எமர்ஜென்சி படம் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே நிலைமைக்கு நான் தள்ளப்படுவேன் எனவும் சமீபத்திய பேட்டியில் உருக்கமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை கங்கனா நன்றாக சமைக்க கூடியவர் என்பதால் ஹோட்டல் பிசினஸ் தொடங்க வேண்டும் என நினைத்தாராம். ஆனால் அவரிடம் போதிய பணம் இல்லாததால், ஹோட்டல் பிசினஸை தொடங்க முடியவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் கடந்த வருடம் கங்கனா ரணாவத் நடித்த Dhaakad என்ற படம் 85 கோடியில் எடுக்கப்பட்ட நிலையில் அந்த படம் வெறும் 2.5 கோடி மட்டுமே வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.