கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகுதியில் வசிக்கும் ராணுவ வீரர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாகர்கோவில் அருகே இருக்கும் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நெய்யூர் தபால் அலுவலகம் அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பம் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ராணுவ வீரரும், அவரது குடும்பத்தினரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.