ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் மேம்பாலத்தில் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி பரிமளா, மகள் ஓவியா ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது பின்னால் வந்த ஆட்டோ இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ரமேஷ், பரிமளா, ஓவியா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி உடனே படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு தனது காரில் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதனையடுத்து காயமடைந்த மூன்று பேரில் உடல்நலம் குறித்து விசாரித்து உரிய சிகிச்சை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். சரியான நேரத்தில் விபத்தில் சிக்கிய குடும்பத்தினருக்கு உதவிய மாவட்ட ஆட்சியருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.