கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை அரசு கலை அறிவியல் கல்லூரி இணைந்து சிறப்பு பட்டிமன்றத்தை நடத்தியது. இந்த பட்டிமன்றத்தை கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் கள்ளக்குறிச்சி கே.சித்ரா கலந்து கொண்டார். இதனையடுத்து ஆட்சி மொழி குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக இருக்கிறதா? நிறைவாக இருக்கிறதா? என்று தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் நடுவராக தமிழ் துறை தலைவர் ம. மோட்ச ஆனந்த் கலந்து கொண்டார்.