கரூர் மாவட்டத்தில் உள்ள மணவாடி பெருமாள் பட்டி காலனியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் மணியின் வீட்டு கதவை உடைத்து மர்ம நபர்கள் 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்து மணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்தி, அவரது மனைவி கஸ்தூரி, கார்த்தியின் சகோதரர் பிரவீன் ஆகிய மூன்று பேரும் மணியின் வீட்டில் திருடியது தெரியவந்தது. இதனால் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து திருடப்பட்ட பொருட்களை மீட்டனர்.