உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குஷிநகர் நகர் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி 16 வயது சிறுவன் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக சிறுமி அழுததோடு உடலில் காயங்கள் மற்றும் ஆடையில் ரத்தக்கரை இருந்ததால் பெற்றோர் சந்தேகமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கிராம பஞ்சாயத்தில் முறையிட்டபோது போலீசில் புகார் கொடுக்கக் கூடாது என அவர்கள் கூறியதோடு சிறுவனின் உறவினர்கள் சிறுமியின் பெற்றோரை மிரட்டியுள்ளனர். இதனால் போலீசில் அவர்கள் புகார் கொடுக்காமல் இருந்த நிலையில் மீண்டும் வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுமியை 16 வயது சிறுவன் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமியின் மருத்துவ செலவிற்கு ஆகும் செலவுகளை தாங்கள் தருவதாக உறவினர்கள் கூறிய நிலையில் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் இந்த புகாரின் படி தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.