தமிழ்நாட்டில் பேருந்துப் பயணத்திற்கான முன்பதிவுகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுகளின் புள்ளிவிவரங்களைக் காட்டிலும் கணிசமாக  உயர்வைக் கண்டுள்ளது. எனவே இதனால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதற்கான  உள்கட்டமைப்பின் தயார்நிலையை உறுதிப்படுத்த மாநில போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தீவிரம் காட்டி வருகிறார். அதே போல் ஊருக்கு செல்ல விரும்புவோரின் எண்ணிக்கையும்  அதிகரித்து வருவதை  கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என  அமைச்சர் சிவசங்கர் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலத்தை முன்னிட்டு கூடுதல் பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வரும். ஆனால் இவ்வருடம் பஸ் கட்டணத்தில் கூடுதல் கட்டணம் தொடர்பான புகார்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, இது பயணிகளுக்கு சுமூகமான மற்றும் திருப்திகரமான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்கான நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை காட்டுவதாகவும். போக்குவரத்து சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.